Tuesday, March 1, 2011

அமைதி என்பது...

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்

அமைதி என்பது மரணத் தறுவாயோ ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?

எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP