Tuesday, March 15, 2011

இயற்கையே

என்னைக் கேளாமலேயே எடுத்துக்கொண்டதற்கு நன்றி

அழகு உன் உறிஞ்சுகுழல், அன்னக் கரண்டி.
என் இதயம் தின்றல்லவா செழித்திருக்கின்றன
உன் அவயவங்கள் எல்லாம்

இங்கே ஆயிரமாயிரம் குளறுபடிகள்
எது அழகு ஆராய்ச்சிகள்.
நீ போய்ச் சொல் என் இயற்கையே
என் இதயம் குறித்து நீ போய்ச் சொல்
காண்பதல்ல,
காண்பதில் காண்பதுவே அழகு என்று சொல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP