Sunday, March 13, 2011

அம்மா உனக்கு ஓய்வில்லையா?

ஒரு கணம் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டாமல்
உன்னை விரட்டுவது எது?
உன் கண்ணில் கசியும்
நூற்றாண்டுத் துயர்களை நான் அறிவேன்
அசோகவனத்துச் சீதையோ, ரவிவர்மாவின்
சிந்தாகுலமிக்க சகுந்தலையோ அல்ல நீ

இந்த அகால வேளையிலும் கூட
பெருக்குமாற்றை எடுத்துக்கொண்டு
பெருக்கிய முற்றத்தையே மீண்டும் மீண்டும்
பெருக்கிய வண்ணமிருக்கிறாய்

காவியக் கற்பனைகளாலும்
தீட்டிவிடத் தீராததோ உன் ரகசியம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP