Saturday, March 5, 2011

வெண்ணிற அல்லி

வெண்ணிற அல்லி ஒன்று வாய்க்காலிலே
பாப்பாவின் தளிர்க்கை பற்றித் தூக்குகையிலே

வேண்டாம் வேண்டாம் என்று
அது கத்தவில்லை

இக்கரையிலும் தடுக்க ஓர் ஆளுமில்லை

எங்கும் ஒளிந்திருந்த பேரின்பம்
இருவருக்கும் கிட்டியதோ ஒரேவேளை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP