Monday, April 4, 2011

அன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்

என் சிறிய பூமியின்
பாறை இறுக்கம் நெகிழ்ந்து உருகி
குளிர்ந்த நீர்த் தடாகமாகிவிட்டதும்
வேரோடு மிதக்கத் தொடங்கியது எனது வீடும்.
வீட்டின் சுவர்கள்
பறக்கவோ சமன்நிலை காக்கவோ,
இல்லை, மிக நன்றாய் மிதக்கத்தானோ
மலரிதழ்களாய் விரியத் தொடங்கின?

அவ்வேளைதானோ
கூரை இடிந்து நொறுங்கி விழும்
அந்த உற்பவம் நிகழும் வேளையும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP