Tuesday, April 5, 2011

தலைவலி

யாரோ ஒருவன் சொன்னான் என்று
(அது நல்ல யோசனையாகவும் பட்டதால்)
என் மண்டையோட்டைக் கழற்றி வைத்துவிட்டு
அருவியில் போய் நின்றேன்
திடுக்கிட்டு
'பளார்’ என்று எகிறி வெளியே குதித்தது
மூளைத் தவளை

அதற்கு உகந்த இடம்;
நீர் கசியும் பாறையடி அல்லது குட்டை

உண்மையைச் சொல்வதானால்
அது பற்றிய சிந்தனையோ பார்வையோ
எதுவுமே அப்போது எனக்கில்லை

வெறுமையின் ஆனந்தத்தில்
திளைத்துக்கொண்டிருந்தேன் நான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP