Friday, April 8, 2011

பொன் இருள் தீபம்

அறியாமையின் பொன் இருள் உன் கண்களில்;
உன் மடியில் பால் கறந்துகொண்டிருக்கும்
அந்த மனிதனின் கண்களிலோ
அனுபவத்தின் ரணம்படிந்த இயலாமைகள்;
வறண்ட தாவரம்போல் நிற்கும்
அவன் மனைவியின் கண்களிலோ
துயரங்களின் ஆறாத காயங்கள்;
கைக்குழந்தையின் வட்டமுகம் முழுக்க
அச்சத்தின் திக்பிரமைக் கறை;
முற்றத்தில் துள்ளி பாண்டி ஆடிக்கொண்டிருக்கும்
சிறுமியிடம் சற்றே எட்டிப் பார்க்கிறது
வாழ்வின் துளி இன்பம்,
பொன் இருளில் ஒளிரும் தீபம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP