Saturday, April 9, 2011

உறுத்தல்

அது செய்த பாவம் என்ன?
தான் அதுநாள் வரை படு உற்சாகமாய்ப்
பற்றிச் சென்றுகொண்டிருந்த நூல்பிரிஏணி
ஓர் இருள் வட்டம்தான் என உணர்ந்தவுடன்
விட்டு விலகி நடந்ததா?
அக் கணமே அச் சிற்றெறும்பு
மனிதனாக மாறிவிடும் என்ற
அச்சம் தன் உடம்பில் ஊறவும்
இரத்தக் கறை படிய அதைத் தேய்த்து எறிவோனே,
மனமிரங்கி
அதனை நோகாமல் தொட்டு விலக்கலாகாதா,
நம் பூணூலும் ஒரு நாள் உறுத்தும் வேளை
அதை எப்படி நீக்குவோமோ, அப்படி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP