Monday, April 11, 2011

அவனுக்குத் தெரியும்

துக்கமா?
இல்லை, வெறும் மௌனம் தானா?
எதையும் ஊடுறுவக் கூடியதும்
எதனாலும் தகர்க்க முடியாததுமான
அந்த வலிய மௌனத்தைச் சொல்கிறேன்.
இல்லை, இந்த மௌனம் ஒரு தூண்டில் முள்ளோ?
தொண்டையில் முள்சிக்கிய
ஒரு புழு உண்டோ அதன் அடியில்?

சிறு மீனுக்காகப் பசித்திருக்கிறாயோ?
வேதனைப்படுகிறாயோ?
சிறுமீனுக்காகப் பசித்திருக்கையில்
கடல் வந்து அகப்பட்டதெண்ணிக்
கைப்படைகிறாயோ?
அயராதே.
எழுப்பு உன்னுள் உறங்கும் மாவீரனை, தீரனை
அவனுக்குத் தெரியும்
கடலை தூண்டிற் பொறியாக்கிச்
சிறுமீன் பிடித்துப் பசியாற

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP