Friday, April 15, 2011

எங்கே இருக்கிறேன் நான்?

நிலவைக் குறிவைத்து
காலமற்ற வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததும்
தவறிற்று, மனிதனைத் குறிவைத்து
உலகின் இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருந்ததும்
தவறிற்று

எங்கே இருக்கிறேன் நான்?

குடிசைக்கு வெளியே
நிலவு நோக்கி மலர்ந்துகிடந்த கயிற்றுக்கட்டிலும்
வெறுமையோடி நிற்கிறது
இரகசியத்தின் மௌனத்துடன்
நிலவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது நதி;
அதில் ஒரு காகிதப்படகு போல் என் குடிசை

ஆனந்தத்தின் கரையை அடைந்திருந்தன
என் கால்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP