Saturday, April 16, 2011

முன்னுரை

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையைப் பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும் போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும் போதோ,
நீ ஒரு பொய்யன், துரோகி, கோழை!
ஏனெனில்
உண்மை, நீ உன் விருப்பத்திற்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடுவதற்குப்
பணிந்து விடும் பசுமாடு அல்ல;
நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்தத்தில் நனைந்த போர்வாள்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP