Sunday, April 17, 2011

ஒரு வெண்புறா

‘ஒரு சிறு புல்லும்
குளிர்ந்த காற்றலைகள் வீசிவரும் வெளியும்
போதுமே.
அத்தோடு உன் அன்பு...
கிடைத்தால் அது ஒரு
கூடுதல் ஆனந்தமே’

உன் நினைவுகளில்
சுகிக்கும் சோகிக்கும்
அந்த மரத்திலிருந்து நழுவுகிறது
ஒரு வெண்புறா
பறந்தோடி வந்து அது
அமர்கிறது உன் மென்தோளில்!
அதன் பயணம்
யாரும் காணாததோர் ரகசியம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP