Wednesday, April 20, 2011

பனித்துளிகள்

1.
அந்திவரை வாழப் போகும்
பூவின் மடியில்
அந்தக் காலைப் பொழுதிலேயே
மடிந்துவிடப் போகும்
பனித் துளிதான்
எத்தனை அழகு!

2.
மலரின் நெடிய வாழ்க்கையில்
அவளுக்கு மரணத்தைச் சொல்லிக்கொடுக்க
இளமையிலேயே கிடைத்த தோழி

3.
ஒருவன் தனக்கெனப் பிடித்துப்
பதுக்கி வைத்துக்கொள்ள முடியாத
தனிப் பெரும் மதிப்புமிக்க
அதிசய முத்துக்கள்

4.
நீ அறிந்தவை துளிதான் துளிதான் என்கின்றன,
அவ்வதிகாலைப் போதில்-
மலர்கள் மீதும் வனத்தின் மீதும்
இலைகளின் மீதெல்லாம்
முறுவலிக்கும் துளிகள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP