Saturday, April 23, 2011

ஓராயிரம் வாட்கள்!

நான் பார்க்கவில்லை என நினைத்து
இரண்டு குட்டிப் பையன்கள்
மூலையிலிருந்த பெருக்குமாற்றிலிருந்து
இரண்டு ஈக்கிகளை உருவி
வாள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்

என்னைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள்.
நான் கேட்டுக் கொண்டேன்;
‘ சண்டையிடுவதா நமது வேலை?‘

பணி, சாதனை, தீரச் செயல்
அனைத்தையும் குறிக்கும் ஒரு பெரும் சொல்லை
அப்பெருக்குமாற்றை வெறித்தபடி என் வாய் முணு முணுத்தது:
“துப்புரவு செய்தல்”

ஓராயிரம் வாட்களையும்
முஷ்டி கனல
ஓர் ஈக்கிப் பெருக்குமாறாக
ஒன்றுசேர்த்து இணைத்துக் கட்டி,
ஒரு தூரிகையைப் போலவோ
ஒரு பூங்கொத்தைப் போலவோ
ஒரு பெருவாளைப் போலவோ
எளிமையாய்க் கையிலேந்தல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP