Sunday, April 24, 2011

பைத்தியம்

உன் வாசலுக்கு நான் வந்தபோது
நீ வெளியே சென்றிருந்தாயோ?
சற்றுநேரம்
உன் இருக்கையில் அமர்ந்தேன்
உன் மெத்தையில் புரண்டேன்
உன் ஆடைகளை அணிந்தேன்
உன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து
அந்த ஆப்பிளோடு
ஏதேதோ சிலவற்றையும்
எடுத்துப் புசித்துவிட்டேன்
நீ வருவதற்குமுன்
வெட்கம் என்னைப் பிடுங்குவதற்குமுன்
எடுத்தவற்றையெல்லாம் விட்டுவிட்டு
ஓடிவந்துவிட்டேன்.
வெறுங்கையோடு
வீதிகளில் அலைந்துகொண்டு
ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி
எவர் இதயத்தையும் கவர முடியாது
வெறுங்கையொடே திரும்பவும் திரும்பவும்
வீதிகளில் அலைகிறேன்
உன் வாசலுக்கு நான் வந்தபோதெல்லாம்
நீ வெளியே சென்றிருந்தாய்.
தன் வீட்டைவிட்டு வெளியேறி
அவ்வப்போது
யாருடையதையோ போல் வந்து பார்த்துவிட்டு
எப்போதும் யாசகனாய் வீதியில் அலையும்
ஒரு பிச்சைக்காரப் பைத்தியத்தைத் குறித்து
மக்கள் பேசிக் கொண்டனர்
நான் உன்னை நினைத்துக் கொண்டேன்
மக்களோ என்னைப் பார்த்துச் சிரித்தனர்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP