Thursday, April 28, 2011

தென்னைகளும் பனைகளும்

எல்லாத் தாவரங்களும் நீர் விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால்
நெடுநெடுவென வளர்ந்தாள் இவள்
சற்றெ வளைந்து ஒயில்காட்டி நின்றாள்
எப்போதும் அப்போதுதான் குளித்து முடித்தவள்போல் விரித்த
நீள நீளமான தன் தலைமயிரை
காற்றால் கோதியபடியே வானில் பறந்தாள்
முலை முலையாய்க் காய்த்து நின்று
தன் காதலனை நோக்கிக் கண்ணடித்தாள்
மென்மையான தன் மேனி எழிலுடன்

எல்லாத் தாவரங்களும் நீர்விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே வாழமுடியாது விரட்டப்பட்டதால்
பாலைகளில் வந்து நின்றாள் இவள்
கருகருவெனப் பிடிவாதமாய் வளர்ந்தாள்
உடலெங்கும் சிராய்களுடன்
கருத்த கல்தூணாய்
சிலிர்த்த குத்தீட்டித் தலைமயிர்களுடன்
கடுமை கொண்டவளாய் நிமிர்ந்தாள்;
இவளிடமும் காதல் இருந்தது,
அந்தக் காதல்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP