Saturday, April 23, 2011

அலுவலகம் போகாமல் வீட்டில் தங்க நேர்ந்துவிட்ட ஒரு பகல் வேளை

அன்றுதான் வீட்டை
நான் முதன்முதலாய்க் கவனித்த்து போலிருந்த்து.
தன் இரகசியத்தை முணுமுணுக்கும் வீட்டின் குரலாய்
சமையலறையில் புழங்கும் ஒலிகள்.
வெளியே மரக்கிளைகளிலிருந்து புள்ளினங்களினதும்
சுவரோரமாய் நடந்துசென்ற பூனையினதும்
சாலையின் அவ்வப்போதைய வாகனங்களினதும்
தலைச்சுமை வியாபாரிகளினதுமான
ஸ்படிகக் குரல்கள்-
வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலை அன்று கேட்டேன்

திடீரென்று வெளி அனுப்பிவைத்த தூதாய்
எளிய ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்.
வியப்புமிக்க மரியாதையோடு
வீட்டுக்காரி தன்னையும் தன் பணிகளையும்
அந்த வேலைக்காரியோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்
அந்த சந்திப்பில்
மீண்டும் வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP