Wednesday, April 27, 2011

நதிகளும் நம் பெருங்கோயில்களும்

முடிவற்ற பொறுமையும் நிகரற்ற ஆளுமையுமாய்
ஒளிரும் மலைகள்
முழுமை நோக்கி விரிந்த மலர்கள்
ஒளி விழைந்து நிற்கும் மரங்கள்
செல்லக் குழந்தைகளாய்த் திரியும் பறவைகள்
கவனிப்பாரற்று வீழ்ந்து கிடக்கும் நதியைத்
தூக்கி எடுத்து மடியில் கிடத்திப்
பாலூட்டிக்கொண்டிருக்கும் தாய்மை

தாகங் கொண்ட உயிர்கள் அனைத்தும்
வந்துதானாக வேண்டிய
தண்ணீர்க் கரைகளையே
தந்திரமாய்த் தேர்ந்துகொண்டு
மறைந்துநிற்கும் வேடர்களைப்போல்
கோயில்கள்

நதியினைக் காண்பதேயில்லை
தீர்த்தயாத்திரை செய்யும் பக்தன்!
மலையினைக் கண்டதுண்டோ
மலர்களைக் கண்டதுண்டோ
கோயில்களுக்குள்ளிருக்கும் குருக்கள்?
மரங்களைக் காண்பதேயில்லை
பறவைகளைக் காண்பதேயில்லை
கோயில் பரிபாலனம் செய்யும் அரசு.
மனிதனைக் கண்டதுண்டோ
மெய்மையைக் கண்டதுண்டோ
பக்தி மேற்கொண்டு அலையும் மனிதன்?

ஆற்றங்கரையின் மரமாமோ
தீர்த்தக்கரையின் கோயில்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP