Monday, May 23, 2011

நித்திய கல்யாணி

அது ஓய்வின்றி ஒழிவின்றி
எப்போதும் தன்னைத்
தன் மலர்களாலேயே அலங்கரித்துக்கொண்டு
தன் ஒரே லட்சியத்தில்
உறுதியாய் வாழ்ந்துகொண்டு
காற்றில் நடனமிட்டுக்கொண்டிருக்கும்
ஓர் அழகு.
தான் கண்டுகொண்ட அந்த இடத்தைவிட்டு
ஒருகாலும் நகராதிருக்க
தன் வேர்கொண்டு அது பற்றியிருக்கும் மண்.
எவர் கண்ணுக்கும் புலனாகாத பொன்.
தன் நெடுங்காலத் தவத்தின்மூலம்
தன் பச்சையத்தில் அது பற்றியிருக்கும் விஷம்
மிருகங்கள் அது தன்னை அண்டாதிருக்கமட்டுமின்றி
அனைத்து நோய்களுக்குமான மருந்தும்.
அந்திக் கருக்கல்களிலும் அதிகாலைப் பொழுதுகளிலும்
இரவுகளிலும் பகல்களிலும்
அதன் வெண்மலர்கள் வீசும்
அம்ருதப் பேரொளி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP