Saturday, May 28, 2011

மண்ணும் மனிதர்களும்

மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய்
நாம் வாழ்ந்த்தெப்போ?

எளிய வீடுகளின் மத்தியிலே
வளர்ந்து வளர்ந்து
காவல் நாயும் இரும்புக் கதவும்
ஓங்கு மதிற் சுவர்களுமாய்
நாம் மாறியபோதோ-
வலியறியாதவர்களாயும் ஆனோம்?

இந்நிலையிலும்
நம் குழந்தைகளுக்கு நம் இல்லங்கள்
கதகதப்பான கருமுட்டைச் சுவர்களாய்க்
கசிந்து உற்றதெப்படி?

கூட்டை உடைத்துக்கொண்டு
கண்டம் விட்டுக் கண்டம் போய்ப்
படிக்கவும் வாழவும்
அவர்களை உந்தும்
ஆற்றலும் நிகழ்களமும்தான் யாவை?

இன்றின் பெருமழைகளிலும்
புயல்களிலும்
ஆழிப் பேரலைகளிலும்
நில நடுக்கங்களிலும்
ஒலிக்கும் இவ் வேதனையின்
பொருள்தான் என்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP