Thursday, June 2, 2011

என் அணிற்பிள்ளைகள்

என் மரநிழல் குளிர்விக்கும்
மதிற்சுவர்மேல்
பருக்கைகள் வைத்துவிட்டு நகர்ந்தேன்.
விரைந்து வந்து உண்ணும்
என் அணிற்பிள்ளைகளின்
பட்டுடலெங்கும் கனலும் பதற்றம்.

ஒரு பக்கம்
குதித்தாடித் திரிய வைக்கும்
அலகிலா இன்ப ஒளிப்பெருக்கு
மறுபக்கம்
குத்திக் குதறி
உயிர் குடித்திடவே
தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கும் கருமை.
நடுவே
வேறு எப்படித்தான் இருக்க முடியும்
இந்த அணிற்பிள்ளைகளின் வாழ்வு?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP