Sunday, June 5, 2011

கப்பன் பார்க், பெங்களுர்

ஒவ்வோர் கணமும் ஓரோர் திசை
திரும்பிய வண்ணமாய்
எக் காலத்தும் எத்திசையும்
எல்லோரை நோக்கியும்
நீண்ட நீண்ட கைகளேயான
ஒரு பெருமரப் பிரமாண்டம்
அந்தப் பூங்காவில்.
அதன் கீழ்
காதல் வேண்டியன்றோ
வந்து-இருந்து-எழுந்து
சென்று கொண்டிருந்தனர் மனிதர்.
அவனோ, அம்மரத்தின்மீதே
காதல் கொண்டவனாய் வந்தமர்ந்திருந்தான்.
அம்மரத்தின் மகத்துவமோ
தன்மீதே தான் கொண்ட
காதலால் இயன்றிருந்தறிந்தான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP