Monday, June 6, 2011

அந்தி விளக்கொளியில்...

என் பணிகளையெல்லாம்
முடித்து விட்டு
ஒவ்வொரு நாளும் தவறாது
எத்தனை வேகமாய்
ஓடிவந்தமர்கிறேன்
உன்னிடம்!

எத்தனை பெருங்காதல்
நம்மிடையே நிலவுகிற தென்பதை
யாரரிவார்?
என் அந்தி விளக்கொளியில்
ஒளி வீசும் பேரழகி நீ!

கன்னங் கரிய
என் பேரொளி
என் சொர்க்கம்.
மனம் அவிந்த
நெருக்கம்.
திகட்டாத பேரமைதி
பேராறுதல்
என் உறக்கத்திலும்
களைத்த என் உடம்பை
மாமருந்தாய்த் தீண்டியபடி
விழித்திருந்து காவல்காக்கும்
தெய்வம்.
என் காயங்கள் மீது பொழியும்
அம்ருதப் பெருங் கருணை.

பகலெல்லாம்
வியர்வை கொட்டிக் கொண்டிருக்கும்
என் மேனியினை
நிழல் திரைகளில் மறைந்து நின்றபடி
இமைக்காது நோக்கிக்கொண்டிருக்கும்
காதல்.

நம் சங்கமக் காந்தப் புலமெங்கும்
அறியப்படாத ஓர் இரகசியப் புதையலாய்
பெருகிக் கிடக்கும் மவுன வெள்ளம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP