Saturday, June 11, 2011

மலர்கள்

நம் பார்வைக்கே
ஏங்கி நிற்கின்றன
தொட்டால் வாடிவிடும் மலர்கள்.

வாடுமோ கல்லில் செதுக்கப்பட்ட மலர்;
காதல் பரிமாறக்
காதலாற் கொய்யப்பட்ட மலர்?

மலர்கள் சில பறித்தாலென்ன
யாதொன்றும் வாடாத
சொர்க்கம் அங்கே நிலவுகையில்?

காம்பு நீட்டி நின்ற ஒரு மலரோ
கடவுளாக்கியது அவனை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP