Monday, June 13, 2011

பாதையோரத்து மலர்கள்

யார் வலியவனும் மனிதனுமானவன்?

தன் ஏழை எளிய சுற்றத்தைத்
தன் தோள்மேல் சுமந்து செல்பவனா?

செல்வம் திரட்டிப் போகிற போக்கில்
தீனர் திக்கற்றவர்களின் இடுப்பொடித்து
வஞ்சித்து, அவர் தோள்மேலே
தன் சுக வாழ்வுச் சவாரியினை
அமைத்துக் கொள்பவனா?

அந்த ஈனச் சுகவாழ்வை
நிலைநிறுத்திக் கொள்ளவே
தீனர் திக்கற்றவர் மற்றும்
கலை கல்வியினது பாதுகாவலனாகி

மானுடம் இதுவரை கண்டுள்ள
அனைத்து நல்லவைகளையும்
எற்றி ஏமாற்றி
தனக்குள் எள்ளி நகையாடும் பைசாசமா?

தெள்ளத் தெளிந்த கூர்மதி ஒளிர
வழிமறித்தும் வழிமறிக்காமலும்
ஒதுங்கி நிற்கின்றன
தன் அழகின் பிடிவாதம் இளகாத
பாதையோரத்து மலர்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP