Tuesday, June 14, 2011

விண்ணளவு பூமி

விண்ணளவு பூமி
விரிந்து நிற்கும் நிலம் நடுவே

செவியின்
இரு கேள்எல்லைகளையும் தாண்டிக்
கேட்டதொருபேரோசை.
கண்ணின்
இரு பார்வை எல்லைகளையும் தாண்டிக்
கண்டதொரு பெருங்காட்சி.

யாவற்றினதும் மையமாய்
யாவற்றையும் அழித்தொழித்து
யாங்கும் எப்பொருளிலும் எக்காலத்தும்
நின்றெரியும் மெய்மையாய்
ஒரு மனிதன்
தன்னை உணர்ந்த வேளை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP