Wednesday, June 22, 2011

மலர்களில் மலர்ந்துள்ளது எது?

மலர்களில் மலர்ந்துள்ளதும்
நின் அகன்ற விழிகளில்
துயிலின்றி விழித்திருப்பதும்

நின் இதழ்களில் கனிந்து
மவுனமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும்

சலனமின்றி நின் செவிகள்
செவிமடுத்துக் கொண்டிருப்பதும்

நின் நாசி மடிலோரம்
பொறுமையாய்க் காத்திருப்பதும்

பெறுதற்கரிய இருப்புடன்
உன் மடிமீது அமர்ந்திருப்பதும்

நின் கருங் கூந்தலில்
இரகசியமாய்ப் புதைந்திருப்பதும்

உன் கைகால் நகங்களில்
கதிரொளி ஏற்றிப்
பணிந்து கிடப்பதும்

நின் மெல்லிய சலனங்கள் ஒவ்வொன்றிலும்
விழி உயர்த்திப் பேச யத்தனிப்பதும்…

இன்னும் இப்புவியை வாழ்வித்துக் கொண்டிருக்கும்
காதலன்றி வேறு என்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP