Sunday, June 26, 2011

அலங்கோலமான

அலங்கோலமான இல்லம்.
அழகும் ஒழுங்குமற்றே
எரிகிறது இவ்வுலகம் என்பதை
உய்த்துணரவியலாத அசமந்தம்.

பகுத்தறிதலில்லாது விடுதலை இல்லை

காணற்கரிதானதே
என் அன்பே,
அன்பின் ஒழுங்கும் அழகும்
அற்புதங்களும்!

ஒன்று, சவத்தன்மையும்
இயந்திரத் தன்மையும் கொண்ட கச்சிதம்.
இல்லையெனில்
அசமந்தமும் சோம்பலும் அறியாமையும்
தூக்கி எறியப்பட வேண்டிய பொருள்கள் மீதான
பற்றும் பிணியும் மூடமும் கலந்த குழப்பம்.

நம் கவனத்தால் ஆராய்ந்து பார்ப்போமோ
இவைகளை எல்லாம்?

அசமந்தத்தின் செயல்கள்தாம்
எத்தனை இவ்வுலகில்!
அசமந்தம்தான்
நம்பிக்கைகளைப் பற்றுகிறது.
நம்பிக்கைகள்தாம்
சக மனிதர்களைப் புறக்கணிக்கவும்
போரிட்டு ஒழிக்கவும் பாய்கின்றன.

என்றாவது நிகழும் அற அதிர்ச்சிக்காகவோ
காத்திருக்கிறது அசமந்தம் இப்போது
காண்பவை ஒவ்வொன்றிலும்
உக்கிரமாய் ஒலித்தபடி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP