Sunday, July 3, 2011

கவிதை எழுதுவது மிகமிக எளிது

நம்மைப் பிணித்திருக்கும்
அனைத்தையும் துறந்து
தன்னந்தனியாய் நிற்பதுபோல;

எவரையும் பின்பற்றாமல்
தனக்கான வாழ்வைத்
தானே கண்டடைந்து தொடர்வதுபோல;

கிரகிக்க வொண்ணா மனிதர்கள் நடுவே
சொல்லொணாப் பொருள் பற்றிச்
சோர்வின்றிப் பேசுவது போல;

ஆற்றுவெள்ளத்தோடு அடித்துப்போய்விடாத
ஆற்றோரத் தாவரம்போல; பாறைபோல;
பறவை போல;

தன்னந் தனியாய் மலையேறித்
திரும்ப இயலாது
மறைவது போல;

துயரங்களினின்றும் தோல்விகளினின்றும்
வேதனைகளினின்றும்
விலகிக் கொள்ளவே முடியாதது போலவும்;

இவை யாவுமறியாத
தாவர இயற்கையின்
மலர்களைப் போலவும்;

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP