Friday, July 8, 2011

மஞ்சள் காட்டிடையே

உலகத் துயர் களைய
தன் ராஜ்யம் துறந்து
மணிமேகலையையும்
அமுதசுரபியையும்
உலகுக்களித்தான்,
தெய்வீகமும்
நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியும்
அடிபட்ட புள்வலியுமாய்ப்
பிறந்த சித்தார்த்தன்.

கண்ணன் எனும்
போதையை ஏழைகளுக்கும்
போகத்தினதும் அதிகாரத்தினதும்
லீலா வாழ்வைத்
தங்களுக்குமாக்கிக் கொண்டது,
செல்வக் குறுங்குழுவின்
ராஜ்ய பரிபாலன
பக்திக் கலாச்சாரம்.

நேற்றின் தொடர்ச்சியில் விழிமூடி
வழுக்கிச் செல்வதா?
அப்பொழுதை அப்பொழுதே அறியும்
அனலில் கால்வைப்பதா?
மஞ்சள் காட்டிடையே
எப்போதும் திகழ்கின்றன,
நம் பாத முனையிலிருந்து
பிரியும் இரண்டு பாதைகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP