Monday, July 11, 2011

வாழ்வின் பெரும் பகுதியும்

வாழ்வின் பெரும் பகுதியும்
பொருளீட்டுவதிலும்
கேளிக்கைகளிலுமே கழிந்துவிட,
எஞ்சிய சொற்பப் பொழுதுகளின்
குழந்தைத்தனமான சந்தோஷங்களினின்றும்
யாரோ அலட்சியப்படுத்தப்பட்டுக் கிடக்கும்
சில்லறைகளைச் சேகரித்துச் சேகரித்துத்தான்
இன்னும் அழிந்துபோய்விடாத இன்பஉலகின்
நோய்க் குழந்தையைக் காப்பாற்றிவருகிறார்கள்.
களைத்த உடலுக்கடியே
தூக்கம் விரிக்கும் மஞ்சத்தைப் போல
மனிதர்களை இளைப்பாற்றி வருகிறாரகள்

பதறிப் பதறித் தங்கள் குழந்தைகளைப்
பேணுதற்கே மனிதர்கள் துடித்துக்கொண்டிருக்க
அந்த யாரோதான் இரக்கம்கொண்டு
அவர்களையும்சேர்த்துக்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

நமது தனிமைகளிலெல்லாம்
தவறாது காட்சி தருகிறது
கண்ணீர் ததும்பும்
அந்த யாரோவின் முகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP