Tuesday, July 12, 2011

வியர்த்தமாகிக் கரைகின்றன

வியர்த்தமாகிக் கரைகின்றன வெளியெங்கும்
யாரோ அழுதழுது புலம்பும் பிரார்தனைகள்

பட்டம் விடும் சிறுவனைப்போல்
யாரோ இந்த அகால வேளையில்
விண்ணை அளாவிக் கொண்டிருக்கிறார்கள்?
இல்லை,
விண்ணோடு விண்ணாய்
விண்ணிற் கலந்து நிற்கிறது எதுவோ

விழித்திருக்கும் ஒரு படுக்கை
அகலத் திறந்த சாளரம் வழியாய்
தன் பிரக்ஞை வீசிப் பிடிக்க
முயன்று முயன்று தோற்கிறது அதனை

விண்ணில் மிதக்கும் அழியாத இன்மையோ
சாளரங்கள் வழியே
புயலாய்ப் பாய்ந்து சென்று
விழித்திருக்கும் வெற்றுப்
படுக்கைமீது படுக்கையாய்ப்
புல்லிக்கொள்ள விழைகின்றது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP