Wednesday, July 13, 2011

திடீரென்று

திடீரென்று
அவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது,
வெகுகாலம் அறைவாசியாய் வாழ்ந்துவந்த
பழக்கத்தினாலா?
தீரத் தீரத் தன்னுள் மூழ்கி
உண்மையினைத் தீண்டியதினாலா?

ஐன்னலருகே வந்து நின்றவள் கண்டாள்
இப் பூமிதான்-தன் மறதி உதறி-
ஒரு புதிய வீடாய்ப் பொலிந்து நின்றதை!

அவ்வண்ணமே வாசலுக்கு வந்து நின்றபோது-
ஆ, கடவுளே!
கால் தரிக்கத் தரையேயில்லாத வெளி!
கண்ட மாத்திரத்தில் அவள் விலாவில்
அடிவயிற்றை உறிஞ்சிக்கொண்டு
குறுகுறுத்து அசையத் துடித்த சிறகுகள்!

ஆனால், கறுத்த வானத்தில்
ஒரு கரும் பறவையாய்
தனது துயர்ப் பாடலால்
ஒரு துயர்ப்பாடலாக மட்டுமே
அறியப்படுகிறாள் அவள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP