Saturday, July 16, 2011

எவ்வளவு காலமாய்

எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பது?

தப்பிக்கும் வழி துழாவிக்கொண்டேயிருக்கும்
அவள் விழிகளைத்தான்
அவன் கண்டுவிட்டானோ?

திடீர் திடீரென அவளைச் சுற்றி
ஒவ்வொன்றாய்
எத்தனை எத்தனை தடுப்பரண்கள்
சூழ்ந்துவிட்டன?

எல்லாவற்றையும்
அவள் தாண்டிவந்து நிற்கையில்
காட்டுவெளியின் மலையடுக்குகளிடையே
காற்றுமட்டுமே சீறிக்கொண்டிருந்த
இடிபாடடைந்த கட்டடங்கள் நடுவே
அவனது பிடியின் துப்பாக்கி முனையில்
திகிலுண்டு நிற்கும் அவளது குழந்தைகள்!

எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்துகொண்டிருப்பது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP