Sunday, July 17, 2011

துயர்மிகுதியால்

துயர்மிகுதியால்
விழிப்பு தகித்துக்கொண்டிருக்கும் இந்த இரவில்
நான் உன்னை நினைத்துக்கொள்வது-
ஓ, கிறிஸ்துவே, எனது அன்பனே!
என்னையும சிறிதளவு
தனிமைத் துயர் தீண்டுவதாலா?

நண்பனே, உன்னைப் பற்றிய ஓர் அரிய உண்மையை
மிகத் தெளிவாக நான் அறிவேன்:
தனிமை நோய் உனது துயருக்குக் காரணமாய்
ஒருநாளும் இருந்ததில்லை.

வாழ்வைத் தீவிரமாய் விசாரிக்கவல்ல
மனிதர்களைத் தேடித் தேடி நீ ஓடியதும்
மக்களைக் கூட்டிக் கூட்டி நீ பேசியதும்
உன்னைப் பற்றி நீயே சிறு பிள்ளைத்தனமாக
பேசிய பேச்சுக்களையும் நீயே கடந்து
இறுதியில்
ஆறாத பெருந்துயராக நிலைத்ததும்
எதனால் என்பதை நன்கு அறிவேன்.
துயரத்தின் சுமை மேலும் அதிகரிக்கும்படியாகியே
இன்று தோற்று நிற்கிறாயே என் இனியவனே,
மீப்பெரும் துயரொன்றே
கருணையாகப் பொழியக் கூடியதென்பதையும்
பெருவாளாய்ப் போராடக் கூடியதென்பதையும்
உன் முன் முழந்தாளிட்டு உருகுபவர்களிடம்
உணர்த்த இயலாது!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP