Monday, July 18, 2011

புதிய பாதையில்

புதிய பாதையில் முதலடி வைத்தவள்
கால காலங்களாய்த்
தன் பாதங்கள் நடந்து வந்த
பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
எத்தனை தவறான பாதையில்
எத்தனை காலங்கள்! எத்தனை துயர்க் கதைகள்!
ஆழ்ந்த பெருமூச்சுப் புயல் ஒன்றில்
எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விட்டனவா?

இழப்புகளின் துயரமாரமில்லை இது.
புதிய பாதை அவளிடம் கேட்டு நிற்கும்
இன்மை, முழுமை, தூய்மை, புனிதம் பற்றிய
பதற்றமுமில்லை
அச்சமுமில்லை
திரும்பிப் பழைய பாதைக்குத்
திரும்பிவிடாதிருக்கும் உறுதி மீதாடும்
இரகசியக் கொண்டாட்டம்!
ஆமாம் இரகசியக் கொண்டாட்டம்!

அவள் தன் அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிறாள்
அவள் இதழ்களிலும் விழிகளிலும்
மறைக்க முடியாத அதன் எதிரொலிகள் கேட்கின்றன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP