Tuesday, July 19, 2011

ஆவலோடுதான்

ஆவலோடுதான் தபால்காரரை நெருங்குகிறான்.
தபால்கள் பெற்று வாசித்து முடிக்கும் போதெல்லாம்
தவறாமல் எரியும் ஓர் உணர்வு
ஏமாற்றம் என்பது இல்லை எனில்...

அன்றாடம்
காண்கிறதும் கேட்கிறதும் வாசிக்கிறதுமான
மேல் விபரங்கள் எல்லாம்
வெகுவிரைவில் மறைந்துவிடும் மாயமும்
அக்கறையிழந்துவரும்
சுரணை நலிவினால் என்றில்லையெனில்...

அணையாது வேகும் காத்திருப்பே இது எனில்

தவிர்க்கமுடியாமல் விளையப்போகும்
என்ன் விபரீத்த்திற்காக? அல்லது நற்சமிக்ஞைக்காக?

இவை ஒன்றுமேயில்லையெனில்
எதை உட்கொள்வதற்கான பசி இது?
எதைச் சமைப்பதற்கான தழல்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP