Friday, July 29, 2011

உரையாடல்

அது என்ன ஓசைகள் என் இனியவனே!
என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய்?

பேசத் தொடங்கும்போது-
சிரிப்பும் கும்மாளமுமோ
போரும் துயரோலமுமோ
அமைதி தவிர்த்த
எதுவாயிருந்தாலுமென்ன?-
பிசிறில்லாத உரையாடலுக்காய்
கைத்தொலைபேசியோடு
என்னைப் போலவே
நீயும் உன் பிரதேசத்திலிருந்தும்
விலகிவந்து நிற்பதை
இங்கிருந்தே உணரமுடிகிறது

வேண்டுவதெல்லாம்
இந்த விவேகம் ஒன்றுதான் நண்பனே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP