Monday, August 1, 2011

மாமலையும் திருமுழுக்காட்டும்

மலைமீது வழிந்து இறங்கிய திருமுழுக்காய்
வயலும் வாய்க்கால் வெளியுமாய்
பரவி விரிந்திருந்த அம்ருத பூமி!

அழகிய அவ்வூர் சென்று தலை சாய்த்தபோது
மறுநாட் காலை
அம்மலை நோக்கி நீண்டதொரு காலைநடை போகத்
திட்டமிட்டே கண்ணயர்ந்தோம்
நடப்பதும் நடை எண்ணி தலை சாய்ப்பதுமான
பயணமன்றோ நம் வாழ்வு

இருவரும் ஒரேவேளை விழித்துக் கொள்ளாததால்
அலுத்துத் துயில்பவரை எழுப்புவதா என்று
ஒருவர் மற்றவரை மாறி மாறிப் பார்த்ததில்
தவறிற்றே அந்தக் காலை நடை!

இப்போது அம்மாமலையைச்
சூரியன் முழுக்காட்டும் அதீத வேளை!
மரநிழலில் ஒதுங்கி நின்று
நாம் அதனை அவதானிக்கும் வேளை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP