Tuesday, August 2, 2011

ஆடும் அவற்றின் செவியறியும்

துயர் அடைந்து நின்ற இவ்வெளியைத்
திடீரென்று
காற்றும் மரங்களும் இணைந்து எழுந்து
வேகவேகமாய்ப் பெருக்கித்
தூய்மை செய்யமுயல்பவை போல்
அசைகின்றன

கபம்போல் நெஞ்சடைத்திருந்த
துக்கமெல்லாம் எங்கே?
என்ன ஓர் ஆசுவாசம்!
காதல் கொண்டவன்போல்
என்ன ஓர் ஆனந்தம்! நிறைவு!

இப்போது மரங்கள்-
நடம் புரிந்துகொண்டிருக்கின்றன

இப்போது நானும் கேட்கிறேன்,
ஆடும் அவற்றின் செவியறியும்
அந்த இசையினை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP