Friday, August 5, 2011

உன்னைப் பற்றிய ஒரு பெரும் புரிதலை...

கேள் பெண்ணே!
நான் என் தாயிடமிருந்தும் பெறவில்லை;
என் பிரிய சகோதரிகளிடமிருந்தும் இல்லை;
காதலென நெருங்கியவர்களிடமிருந்தும் இல்லை;
தோழிகளெனத் துணை நின்றவர்களிடமிருந்தும் இல்லை;
மனைவியிடமிருந்தும்கூட இல்லை;
பெண்ணியவாதங்கள் என்றால்
அது நேரனுபவம் இல்லையே அம்மா;
பெண்ணியவாதிகள் தம் கூற்று மற்றும் என் அறிவு என்றால்
அதில் ஆறாத புண்ணின் வலியே
அநேகமானதை மறைத்து நிற்கின்றது

என் கண் பார்க்க ஒரு ஆளாய் வளர்ந்துகொண்டிருக்கும்
நான் பெற்ற என் அருமை மகளிடமிருந்தல்லவா
அந்தப் பெறுபேற்றினை அடைந்தேன் நான்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP