Thursday, August 23, 2012

விலங்கினை விட மனிதன்

விலங்கினை விட மனிதன்
பல படிகள் மேலேறியதனாலோ
இனக் குழுக்கள் தம்மிடையே
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தன?

இன்றும்
போரும் துயருமாய் வதைபடும் நிலைதானோ
விலங்கினின்றும் மனித விலங்கு
அடைந்துள்ள முன்னேற்றம்?

என்ன செய்து கொண்டிருக்கிறாள்,
கவிஞனே, நீ அறிந்த
உன் காதல் தெய்வம்?

”ஒரு வீட்டார்
தம் வீட்டுக்குள்ளே
மணம் செய்துகொள்ள வேண்டாமென்று
சொன்னது அவளல்லவா?”

இன்றும்
பசித்து அலறும் வாயில்
அம்மா,
சூப்பியைத் திணித்துவிட்டுச் செல்வதாலோ
வாய் முன்நீண்ட
விலங்குகளாகவே தொடர்கிறோம், நாம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP