Friday, August 31, 2012

பொருண்வயிற் பிரிந்தவன்

பொருண்வயிற் பிரிந்த தலைவனோ அவன்?
(உன் தனிமையை நான் அறிவேனன்றோ?)
கடல் தாண்டி
காலம் பல கடந்து
வழுவாத ஒழுக்கத்துடன்
பெரும் பொருளீட்டிக் கொண்ட
செல்வனோ?

துரிதமாகவும் எளிதாகவும்
உன் முன் கொண்டுவரும் முகத்தான்
பொருளின் முழுமதிப்பும் குன்றாமல்
கையடக்கமான ஒரு பெட்டிக்குள்
அடக்கிக் கொண்ட விவேகியோ?

திறந்த அப் பெட்டிக்குள்
காட்சியளித்தது,
பொருளின் பொருளையெல்லாம்
உணர்த்தும் ஒரு கவிதையா?
அல்லது வெறும் பணம்தானா?
சொல்லடி என் தோழி,
எப்பேர்ப்பட்டவன் உன் ஆண்மகன்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP