Thursday, August 30, 2012

கரும் புள்ளி

மானுட முகத்திலொரு
கரும் புள்ளி வந்ததெப்படி?

உயிரின் ஆனந்தமாய்
மலர்ந்தாடிக் கொண்டிருக்கும்
குழந்தைக்குத் தெரியாது,
தன் பட்டுக் கன்னத்தில்
அம்மா இட்டிருக்கும்
கரும் பொட்டு எதற்கென்று.

அறிந்தும் அறியாதவளாய்
அவனோடு மகிழ்ந்து கொண்டிருப்பதென்ன
அவனது இளம் தாயும்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP