Friday, August 24, 2012

பக்திப் பழங்கள்

கையில் விசிறியுடன்
இடுப்பாடை மட்டுமே அணிந்த
ஒரு வேனிற்கால மிதவெப்பமண்டலவாசி
பழுத்த பூசணிபோல் துலங்கு
மேனியெங்கும் பூண்ட திருநீற்றுப் பட்டைகளும்
கவலையின் ரேகை படியா
மந்தகாசப் புன்னகையுமாய்
வந்து கொண்டிருக்க,

’பக்திப் பழம்! பக்திப் பழம்!’
என வணங்கி வியந்தபடி
வழிவிட்டது கூட்டம்.
நம்மைப் போலவே இருக்கும்
இவனுக்கு மட்டும் வந்த வாழ்வைப் பாரேன்
என்று சற்று அசூயை கொண்டது,

கூடையிலுள்ள ஒரு குண்டுத் தக்காளி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP