Thursday, September 13, 2012

சாரணை மலர்கள்

ஒளிரும் வான்நோக்கிய புன்னகையோ,
இருள் வேளைகளில்
ஒலிக்கும் தேவதைகளின் சொற்களோ,
காதல் தெய்வத்தின் பட்டுக் கன்னங்கள்
தொட்டுணர முன்னும் வேட்கையோ?
பகலில் பரிதியையும்
இரவில் விண்மீன்களையும்
இமைக்காது பருகிக் கொண்டிருக்கும் காதலோ
வானம் தன் முகம் பார்க்க விரித்த ஆடிக்குள்ளிருந்தே
அவன் முகம்நோக்கி அண்ணாந்த மோகமோ,
தனது மாசுக் கேட்டையும் துயர்களையும்
ஒரு கணம் மறந்து நின்ற
பூமியின் நெகிழ்ச்சியோ
தூய தன் மகிழ்ச்சியோ
நீர்க்கரைகள் தோறும் தோன்றும் உயிரொளியோ
ஒளி ஊடுறுவும்படியாய்ப் பூத்த
வெண்மையும் மென்மையும் கொண்ட
இந்தச் சாரணை மலர்கள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP