Monday, September 3, 2012

அபயக் குரல்

துயர்மிகுதி தாங்கொணாது
பித்துப் பிடித்ததுவாய்
மரங்களைப் பிடித்தாட்டித்
துன்புறுத்திக் கொண்டிருந்தது காற்று.
அடிக்கடி இதற்கு இப்படித்தானாகி விடுமென்று
அலட்டிக் கொள்ளாதிருந்தனர் மாந்தர்.
இல்லை, அதன் அவசரமான கூப்பாட்டினைப்
படித்துவிட்டவன்போல் எழுந்து நின்றான்
ஒருவன்.
காற்றும் மரங்களும் அதனைக் கண்டு
அமைதியடைந்து நின்றன அவ்வேளை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP