Sunday, September 30, 2012

குழந்தையும் தெய்வமும்

கடவுள்,
தன் மாண்புகளின்
வேதனைகளையெல்லாம் விடுத்து
சற்றே இளைப்பாறவோ,
ஒரு சிறிய இனக்குழுக் குடும்பத்தில்
பிறந்து தவழ்கிறார்?
தனது பிஞ்சுக் கரங்களால்
வேட்கையுடன்
ஒரு மலரைப் பறிக்கிறார்?
தன்னைச் சூழ்ந்துள்ளவர்களைப் பார்த்து
நாம் என்கிறார்?

திடுக்குற்று விழித்தெழுந்தவரோ
காதலின் அடையாளமாய்
மீண்டும்
அம்மலரைத் தன் அன்பர்களுக்களிக்கிறார்?
நாம் என்ற சொல்லால்
அனைத்து உயிரினங்களையும்
அணைத்துக் கொள்கிறார்?
துயருக்குள் இழுத்துச் செல்லப்படுகிறார்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP