Sunday, September 23, 2012

காவல்

பெருநகர் மனிதத் திரள் வாழ்நிலத்தை
அன்றே அப்பொழுதே
அமைதியின்பம் தவழும் சொர்க்கமாக்குவது
(கடவுளா? மதமா?)
ஓர் ஒழுங்கியல் ஒழுக்கமின்றி வேறேதுமுண்டோ?

ஊரடங்கிய இரவின் அமைதிகளில்
நகர் நடுவின் போக்குவரத்துமிக்க
நாற்சந்திகளிலும் தெருக்களிலும்
ஒழுங்குவிதிகளும் துன்ப துயரங்களுமற்று
ததும்பிநின்ற இயற்கைவெளியின்
தனிப்பெருங் கருணையினைத்
தரிசித்தோமல்லவா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP