Friday, September 28, 2012

அந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய அந்தப் பிரகாரத்தில்தான்…

கோயில் மாநகரின்
பெருங் கோயில் எங்கும்
சோர்ந்துவிடாத மனிதர் கூட்டம்.

பொழுதுபோக்கு
சுற்றுலாக் கவர்ச்சி
கலை
மானுட ஆற்றல்
பக்தி, வியாபாரம்
பிழைப்பு, தந்திரம்
யாவற்றையும் பார்த்தபடி
கல்லாய் உறைந்திருந்தது
கோயில்.
கோயில் தெப்பக்குளத்தில்
மாட்டிக்கொண்ட நீராய்
நெகிழ்ந்திருந்தது
காதல்.
சுற்றி
வான் நோக்கிய படிக்கட்டுகளில்
அமர்ந்தன
கோயில் சுற்றிக் சடைந்த கால்கள்.

அந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய
அதைப் பிரகாரத்தில்தான்
கண்டேன் நான் ஒரு பெண்ணிடம்:
பேரரசின் இளவரசி
தன் சுகமஞ்சத்தில் சாய்ந்தபடி
அளக்கவொண்ணா எழிலும்
அடங்காத காதலும்
அழிவிலாத மெய்மையுமாய்
மிளிரும் தன் விழிகளால்
இவ்வுலகைப் பார்த்துக் கொண்டிருந்ததை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP